Kolkata :
கடந்த வியாழனன்று கொல்கத்தாவில் பேசிய மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, ஹிந்து மதம் ஒற்றுமைக்கான மதம் என்றும், அது எப்போதும் தனது கதவுகளை மூடியதில்லை என்றும் தெரிவித்தார். 'பாரத் சேவாஸ்ரம்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் அவர் பேசியபோது "மதம் என்பது கலாச்சாரம், ஒற்றுமை மற்றும் அன்பு என்று கூறினார். மேலும் மதம் ஏழைகளை வலிமைப்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார். ஹிந்து மாதத்திற்கு 'பிரித்து ஆளும்' விஷயத்தில் நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.
மத்தியிலிருந்து மாநிலத்திற்கு வரும் நிதி குறைக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்று எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
COMMENTS
Advertisement