Read in English
This Article is From May 29, 2019

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை

பாஜகவினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 54 பேர் அரசியல் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்கள். இந்த குற்றச்சாட்டுதான் மம்தாவின் மனதை மாற்றியிருக்கலாம் என்று பலருக் யூகிக்கின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

மம்தா அதற்கு “என்னை மன்னியுங்கள்” என்று தெரிவித்தார்.

New Delhi/ Kolkata:

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். நாளை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. மம்தா அதற்கு “என்னை மன்னியுங்கள்” என்று தெரிவித்தார். 

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன் ட்விட்டர் பக்கத்தில் 54 தொழிலாளர்கள் வங்காளத்த்தில் அரசியல் வன்முறையால் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டுவது மிகவும் தவறு என்று கூறியுள்ளார். 

மம்தா பானர்ஜி மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜகவினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 54 பேர் அரசியல் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்கள். இந்த குற்றச்சாட்டுதான் மம்தாவின் மனதை மாற்றியிருக்கலாம் என்று பலருக் யூகிக்கின்றனர். 

Advertisement
Advertisement