This Article is From Sep 29, 2018

65 வயது பெண்ணுடன் மது அருந்திய நபர்… போதையில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார்!

40 வயதாகும் அந்த நபர், 65 வயது துப்பரவுப் பணியாளரான அந்தப் பெண்ணுடன் அடிக்கடி மது அருந்துவார் என்று கூறப்படுகிறது

65 வயது பெண்ணுடன் மது அருந்திய நபர்… போதையில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார்!

இருவரும் மது அருந்தும் போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது, போலீஸ்

Tiruvarur, Tamil Nadu:

திருவாரூர், வலங்கைமண் என்ற ஊரில் 65 வயது பெண்ணுடன், விவசாயி ஒருவர் மது அருந்தினார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போதையில் அந்த விவசாயி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது.

40 வயதாகும் அந்த நபர், 65 வயது துப்பரவுப் பணியாளரான அந்தப் பெண்ணுடன் அடிக்கடி மது அருந்துவார் என்று கூறப்படுகிறது. அப்படி மது அருந்துகையில் தான் பெண்ணை, விவசாயி பலாத்காரம் செய்துள்ளார் என்று சந்தேகப்படப்படுகிறது.

பலாத்காரம் செய்யும் போது அந்தப் பெண் கூச்சலிட, அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். அப்போது விவசாயி, விஷயத்தை வெளியே சொன்னால் விளைவுகளை மோசமாக இருக்கும் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸ், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டப் பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.