Read in English
This Article is From Jan 09, 2020

பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!!

கொலை மிரட்டல் விடுத்தவர் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் வந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

CAA, NRC ஆகியவற்றால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றால், மோடி, அமித் ஷாவை கொன்று விடுவேன் என்று அன்வர் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த கர்நாடகத்தை சேர்ந்த அன்வர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொலை மிரட்டல் விடுத்தவர் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் வந்துள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றை வாட்ஸ்ஆப்பில் அன்வர் வெளியிட்டிருந்தார். இது வைரலாக சர்ச்சையை உண்டாக்கியது.

அன்வரின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். 

Advertisement

இதுதொடர்பாக கர்நாடக மாநில்ம் விட்டல் காவல் நிலையத்தில் யதீஷ் என்பவர் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பெருவையில் அன்வரை கைது செய்துள்ளனர். 

புகாரில், அன்வர் தனது பதிவுகளில் CAA, NRC ஆகியவற்றால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கொல்வேன் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அன்வர் தனது சொந்த கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர்கள் அன்வரை கைது செய்தனர். 

அன்வர் கத்தார் நாட்டில் கார் டிரைவாக உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Advertisement