Surat:
கடந்த ஞாயிறன்று சூரத் போலீசாரால் 3.80 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த நபரை கைது செய்யப்பட்டார்.
‘வழக்கமான வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுடன் காரில் வந்த நபரை நாங்கள் கைது செய்ததுடன் பணத்தையும் பறிமுதல் செய்தோம்' என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.எம்.சாரோடி கூறினார்.
பழைய நோட்டுகளுடன் பிடிபட்ட அந்த நபரை போலீசார் விசாரித்தபோது, பழைய நோட்டுகளை வாதோதாராவில் இருந்து எடுத்து வந்ததாக போலீசாரிடம் அந்நபர் தெரிவித்தார். ‘பிடிபட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து தான் என்ன செய்ய இருந்ததாக இன்னும் அவன் சரியாக கூறவில்லை' என போலீசார் தெரிவித்தனர்.
COMMENTS
Advertisement