This Article is From Nov 12, 2019

ஹிர்த்திக் ரோஷனின் ரசிகையாக இருந்த மனைவி : பொறாமையால் கொலை செய்த கணவன்

ஹிர்த்திக் ரோஷன் மீது உள்ள ஆர்வத்தை குறைத்துக் கொள்ள கூறியுள்ளார். இல்லையென்றால், அவரைக் கொன்றுவிடுவதாகக் கூட மிரட்டினார்.”

ஹிர்த்திக் ரோஷனின் ரசிகையாக இருந்த மனைவி : பொறாமையால் கொலை செய்த கணவன்

டோஜோ, ஹிர்த்திக் ரோஷனின் தீவிர ரசிகை

New York:

இந்தி நடிகர் ஹிர்திக் ரோஷனை பிடிக்கும் என்று அடிக்கடி கூறிய மனைவியை குத்திக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்வர் (33) இவரது மனைவி டோனி டோஜோய் (27) அங்குள்ள பார் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் டோஜாயின் சகோதரிக்கு செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதை எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உங்கள் தங்கை டோஜோயை கொன்றுவிட்டேன். வீட்டுச்சாவியை கீழே பூந்தொட்டியில் வைத்திருக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு உறவினர்களுடன் அவசரமாக வீட்டுக்கு வந்த சகோதரி பார்த்தார். பிணமாக கிடந்தார் டோஜோய்.  குடியிருப்புக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தினேஷ்வர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். டோஜோவின் தோழி, “டோஜோய் அழகாக இருப்பார். அவரை தினேஷ்வர்  அதிகம் விரும்பினார். அதனால் பொறாமை கொண்ட கணவர், டோஜோவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள விரும்பினார். ஹிர்த்திக் ரோஷன் மீது உள்ள ஆர்வத்தை குறைத்துக் கொள்ள கூறியுள்ளார். இல்லையென்றால், அவரைக் கொன்றுவிடுவதாகக் கூட மிரட்டினார்.” என்று தெரிவித்துள்ளார். 

டோஜோ ஹிர்த்திக் ரோஷனின் தீவிர ரசிகை. அவரின் படம் வெளியான முதல் நாளிலேயே பார்த்து விடுவார். ஹிர்த்திக் நடித்த பட பாடல்களைத் தான் கேட்டுக் கொண்டிருப்பார்.இதுவே தினேஷ்வரின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.  

.