This Article is From May 29, 2019

நீ அவனைத்தான் கல்யாணம் பண்ணனும் - அப்பாவைக் கடத்தி மகளிடம் பேச வைத்த இளைஞன்

மதுராவில் இளைஞன் ஒருவன் தான் காதலித்த பெண்ணின் அப்பாவைக் கடத்தி “ இந்தப் பையன் நல்லவன் அவனை திருமணம் செய்து கொள்” என்று தன் மகளிடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

நீ அவனைத்தான் கல்யாணம் பண்ணனும்  - அப்பாவைக் கடத்தி மகளிடம் பேச வைத்த இளைஞன்

அவளுடைய மொபைலுக்கு வந்த அழைப்பை கண்காணித்து மதுராவில் கைது செய்துள்ளனர்.

New Delhi:

மதுராவில் இளைஞன் ஒருவன் தான் காதலித்த பெண்ணின் அப்பாவைக் கடத்தி “ இந்தப் பையன் நல்லவன் அவனை திருமணம் செய்து கொள்” என்று தன் மகளிடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். கடத்தி சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சஞ்சய் என்ற இளைஞன் மதுராவில் திங்களன்று கைது செய்யப்பட்டார். ஏசிபி ராஜேந்திர் சிங் தலைமையிலான தொழில்நுட்ப கண்காணிப்பு குழுவின் உதவியுடன் காவல்துறை கைது செய்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு சஞ்சு தன் தந்தையை கடத்தியிருக்கலாம் என்ற என்று சந்தேகித்தார். அவளுடைய மொபைலுக்கு வந்த அழைப்பை கண்காணித்து மதுராவில் கைது செய்துள்ளனர். 

விசாரணையில் அந்தபெண்ணின் தந்தை திருமணத்திற்கு எதிரிப்பு தெரிவித்து சொந்த ஊருக்கு பெண்ணை அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

சஞ்சுவின் நண்பர்களிடம் காரை வாங்கி மூன்று நண்பர்களின் உதவியுடன் இந்த குற்றத்தை செய்துள்ளான். அவனின் நண்பர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

.