This Article is From Feb 24, 2019

ஒருதலை காதலால் விபரீதம்! - ஆசிரியை கொன்ற வாலிபர் தற்கொலை!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆசிரியை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலை காதலால் விபரீதம்! - ஆசிரியை கொன்ற வாலிபர் தற்கொலை!

கடலூர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ஆசிரியர் ரம்யா. இவர் காய்த்ரி மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். ரம்யாவுக்கு வீட்டு அருகிலே பள்ளி இருப்பதால், தினமும் சிக்கிரமே பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திடீரென நுழைந்த ஒருவர் ரம்யாவை சரமாரியாக வெட்டினார்.

இதில், ரம்யா ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்து விழுந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதைக்கண்டு பள்ளியில் இருந்த சக ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ரம்யாவை ராஜசேகர் என்ற இளைஞர் ரம்யாவை ஒரு தலையாக காதலித்தது தெரியவந்தது. ராஜசேகர் ரம்யாவின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டதாகவும் ஆனால், ரம்யாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ரம்யா கிடைக்காத விரக்தியில் ராஜசேகர் ரம்யாவை பள்ளியில் புகுந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தலைமறைவான ராஜசேகரை தவீரமாக தேடி வந்தனர். இதனிடையே, ராஜசேகர் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக தனது சகோதரிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக தேடிவதை அறிந்து முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்போது அவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் படிக்க : பள்ளி வளாகத்தில் ஆசிரியை படுகொலை! - கடலூரில் பயங்கரம்!
 

.