Read in English
This Article is From Dec 02, 2019

4 வயது சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்ற நபர்: நிர்வாணமாக இழுத்துச் சென்ற ஊர் மக்கள்

ஜவஹர் வைத்யாவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பார்டி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்‌ஷோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement
Nagpur Edited by

வைத்யா தினம்தோறும் சிறுமியின் வீட்டிற்கு பணம் வசூலிக்க வருபவர். (Representational)

Nagpur:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பர்தி பகுதியில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்து கைகளைக் கட்டி நிர்வாணமாக இழுத்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் மக்கள் ஜவஹர் வைத்யாவின் (35) கைகளைக் கட்டி காவல்துறையில் ஒப்படைக்கும் முன் நிர்வாணமாக தெருவில் இழுத்துச் சென்றதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஜவஹர் வைத்யா என்ற நபர் கூட்டுறவு சங்க வங்கியின் தினசரி பண வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். “வைத்யா தினம்தோறும் சிறுமியின் வீட்டிற்கு பணம் வசூலிக்க வருபவர். ஞாயிற்றுக் கிழமை மாலை தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அப்போது திடீரென சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்து விட நடந்ததை பார்த்து கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் அந்நபரை நிர்வாணமாக்கி கைகளை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்  என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இறுதியாக ஜவஹர் வைத்யாவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பார்டி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்‌ஷோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement
Advertisement