திமிங்கலம் ஒன்று தனி மனிதருடன் பந்து விளையாடுமா…? யாராலும் நம்பமுடியாத தருணத்தை காணொளி மூலம் நிரூபித்துள்ளனர். மெட்ரோ நியூஸ் படி, ஆர்க்டிக் துருவத்தில் அருகில் ரக்பி ரசிகர்கள் ஒரு பந்தை பெலுகா திமிங்கலத்துடன் விளையாடியதை படமாக்கியுள்ளனர்.
இந்த விளையாட்டுக்காக 2019 ரக்பி உலகக் கோப்பை பந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. ஆர்க்டிக் துருவத்தில் கடலில் இருக்கும் ஜெமினி கிராஃப்ட் கப்பலில் உள்ள குழுவினர் இந்த வீடியோவை எடுத்ததாக நியூசிலாந்து ஹெரால்ட் தெரிவித்துள்ளது. பெலுகா திமிங்கலம் படகில் இருந்த ஒருவருக்கு பந்தைக் கொடுப்பதிலிருந்து வீடியோ தொடங்குகிறது.
ரக்பி பந்தை மீண்டும் தண்ணீரில் தூக்கி எறிய நட்பான பெலுகா திமிங்கலம் மீண்டும் சென்று பந்தை எடுத்து அவரிடம் திருப்பித் தருகிறது. இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 4.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
பலரும் வியந்து இந்த வீடியோவிற்கு கமெண்டு செய்துள்ளனர். இதே வீடியோவின் மற்றொரு வெர்ஷனும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. ட்விட்டர் பயனர்கள் பலரும் நான் பார்த்த வீடியோக்களில் அழகான வீடியோக்களில் ஒன்று என்று கூறியுள்ளனர்.