This Article is From Dec 09, 2018

தானே மாவட்டத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை

இந்த வீடியோ ஆதாரம் இணையத்தில் வைரல் ஆனதோடு விசாரணைக்கும் துண்டியுள்ளது

தானே மாவட்டத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை
Thane:

மகராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்யாண் ரயில் நிலையம் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை செய்துகொண்டார் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தில் உடலை கண்டதாக போலீசாருக்கு தெரியவந்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.

தற்கொலைக்கு ப காரணம் இன்னும் தெரியாத நிலையில், அந்த நபரை ரோஹித் பார்தேஷி (Rohit paradeshi) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரிடமிருந்து கைபற்றிய செல்போனில் உள்ள வீடியோ பதிவில் தன் சாவிற்க்கு யாரும் காரணமில்லை என்று இருந்தது.

மேலும், இச்சம்பவத்தை குறித்து இன்ஸ்பெக்டர் தீன்கார் பிங்கில் தரப்பு நடத்திய விசாரணையில் விபத்தினால் இறந்திருக்கலாம் என்று இதை கருதி உடல்கூற்றாய்வுக்கு அனுப்பி இருப்பதாக கூறினார்.

‘நாங்கள் சம்பவ இடத்திற்க்கு செல்லும்போதே இறந்துபோன நபரின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் இருந்தது. அவரின் உடமையில் இருந்த செல்போனை பார்க்கும்போது அதில் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தனக்கு ஒரு தம்பி மட்டுமே உள்ளதாகவும் அவனுக்கே தனது சொத்துகள் சேரவேண்டும்' என போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்து.

இந்த வீடியோ ஆதாரம் இணையத்தில் வைரல் ஆனதோடு விசாரணைக்கும் துண்டியுள்ளது.

.