Muzaffarnagar :
குடிப்பழக்கத்தை கண்டித்ததால் மாமனாரை மருமகன் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரை சேர்ந்த விபின் குமார் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது மாமனார் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விபின் குமார் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விபின் குமாரை கைது செய்து அவர் பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
கொலையான விபின் குமாரின் மாமனார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
COMMENTS
Advertisement