Read in English
This Article is From Oct 17, 2019

உயிரைப் பணயம் வைத்து சிங்கத்தின் அருகே சென்ற இளைஞர்!! டெல்லியில் பரபரப்பு!

டெல்லி உயிரியல் பூங்காவின் பிரமாண்ட சுவரில் ஏறிக் குதித்து இளைஞர் ஒருவர் சிங்கத்தை பார்க்க வந்துள்ளார். சிங்கத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் காட்சி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

டெல்லி உயிரியல் பூங்காவில் வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்கு சிங்கம் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவுக்குள் வந்த இளைஞர் ஒருவர், சிங்கத்துடன் பேச முயன்றார்.

அவருக்கும் சிங்கத்திற்கு சில அடி தூரம்தான் இருக்கும். சிங்கத்தை பார்த்த அந்த இளைஞர் சிறிது நேரத்திற்கு அதனுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

கொஞ்ச நேரம் பொறுத்திருந்த சிங்கம், பின்னர் அவரை நோக்கி கோப முகத்துடன் செல்லத் தொடங்கியது. இதனால் பின்னோக்கி அந்த இளைஞர் சென்றார்.

இந்த காட்சிகளால் அதிர்ச்சி அடைந்த உயிரியல் பூங்கா காவலர்கள், மதி நுட்பத்துடன் செயல்பட்டு சிங்கத்திடம் இருந்து இளைஞரை லாவகமாக மீட்டெடுத்தனர்.

Advertisement

அவர்யார், எதற்காக இந்த விஷப் பரிட்சையில் இறங்கினார் என்பதுகுறித்த விவரம் தெரியவரவில்லை.

உயிரியல் பூங்காவின் பிரமாண்ட மதில் சுவற்றில் ஏறிக் குதித்து அவர் உள்ளே நுழைந்திருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரை பணயம் வைத்து சிங்கத்திடம் நெருங்கிச் சென்ற இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement