Read in English
This Article is From Oct 04, 2018

ரூ.24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவர் கைது!

விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவரிடம் வெளிநாட்டு ரூபாய்களான அமெரிக்க டாலர் மற்றும் ரியால்கள் கிடைத்தன. அதன் இந்திய மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும்.

Advertisement
நகரங்கள்

ரூ.24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்.

New Delhi:

புதுடெல்லி விமான நிலையத்தில் இந்திய ரூபாயில் 24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று துபாய் செல்ல முயன்றவரை சந்தேசகத்தில் பேரில் விசாரித்த போது அவர் பணத்தை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணியின் உடைமகளை சோதனை செய்ததோடு அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் அவர் ரூ.24.17 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் ரியால் போன்ற மேலும் பல வெளிநாட்டு ரூபாய்களை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, பணத்தை கடத்த முயன்றவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Advertisement