Read in English
This Article is From Nov 01, 2018

காதலனை வீட்டில் பூட்டி தீயிட்டு எறித்த காதலியின் குடும்பத்தினர்!

நரேந்திரா சக்யா, 90 சதவிகிதம் தீ காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்

Advertisement
நகரங்கள் (with inputs from ANI)

உத்திர பிரதேச மாநிலத்தில் நரேந்திர சக்யா என்ற நபரை தீயிட்ட காதலியின் பெற்றோர்

Etah, Uttar Pradesh:

உத்திர பிரதேச மாநிலம், எடா மாவட்டத்தில் ஒரு பெண் வீட்டார், அந்தப் பெண் காதிலித்த நபரைத் தீயிட்டு எறித்துள்ளனர். அந்த நபர் நரேந்திரா சக்யா எனவும், அவர் ஒரு டிரைவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 22 வயது நிரம்பிய நரேந்திரா, 90 சதவிகிதம் தீ காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.

"அந்த இளைஞரை அவர் காதலியின் குடும்பத்தினர் சேர்ந்து தீயிட்டுள்ளனர். மூவர் சேர்ந்து அந்த நபரை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தீ வைத்துள்ளனர். இதுரை இருவரை கைது செய்துள்ளோம். அந்த நபர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார்" என்று போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்து பேச வேண்டும் என்று கூறி அந்த நபரை வீட்டுக்கு அழைத்துள்ளனர். அவர்களின் மகள் ரஷ்மிக்கும், நரேந்திராவுக்கும் திருமணம் செய்து வைப்பதாக அவரிடம் கூறியுள்ளனர். அவர் வீட்டுக்குள் வந்ததும், பெண் வீட்டார் மூவர் சேர்ந்து, நரேந்திராவை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு அறைக்குள் அடைத்துள்ளனர். அவரை கட்டிலில் கட்டி வைத்து, மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துள்ளனர். நரேந்திராவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்தள்ளனர்.

Advertisement
Advertisement