This Article is From Jan 07, 2019

நாய் மீது கல் எறிந்தவர் சுட்டுக் கொலை

தனது சொந்த நாய் கல்லடி பட்டதை பார்த்த அதன் உரிமையாளர் ஓடிச் சென்று துப்பாக்கியை எடுத்து, நாயை கொன்றவரை சுட்டுக் கொன்றார்.

நாய் மீது கல் எறிந்தவர் சுட்டுக் கொலை

டெல்லியின் வெல்கம் காலனி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

New Delhi:

டெல்லியில் நாயை கல்லால் அடித்தவரை நாயின் உரிமையாளர் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

வடகிழக்கு டெல்லி பகுதியில் வெல்கம் காலனி உள்ளது. இங்கு நேற்று காலை 30 வயதுடை அபாக் என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் குரைத்த நாய் ஒன்று அவரை கடிக்க முயன்றுள்ளது. இதனால் பயந்துபோன அபாக் நாய் மீது கல் எறியத் தொடங்கினார்.

இதைப் பார்த்த நாயின் உரிமையாளர் மெஹ்தாப், உடனடியாக வீட்டிற்குள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்தார். பின்னர் அபாக் மற்றும் மெஹ்தாப் இடையே சிறிய வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதன் முடிவில் அபாக்கை மெஹ்தாப் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

.