Read in English
This Article is From Oct 12, 2018

நவம்பர் முதல் மீண்டும் பணியை தொடர்கிறார் மனோகர் பாரிக்கர்!

பாஜக-வின் கோவா மாநில கழக உறுப்பினரான மத்திய அமைச்சர் ஸ்ரீபட்நாயக், எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து பேசினார்.

Advertisement
Goa

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Panaji:

கல்லீரல் ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீபாவளியின் போது தனது பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் இன்று கூறினார்.

பாஜக கட்சியின் கோவா மாநில கழக உறுப்பினரான ஸ்ரீபட் நாயக், கல்லீரல் பாதிப்பினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கரை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், நாங்கள் இருவரும் ஆட்சிமுறை குறித்து ஆலோசித்தோம், மேலும், கூடுதல் கேபினட் அமைச்சர்களுக்கான இட ஓதுக்கீடு குறித்து பேசினோம், என்றார்.

Advertisement

மேலும் கோவா மாநில முதலமைச்சராக வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. பாரிக்கரின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது எனவே அவரே முதலமைச்சராக தொடருவார் என்று கூறினார்.

இவர்களுடன் கோவா மாநில, பாஜக கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் வினய் டெண்டுல்கரும் உடன் இருந்தார்.
 

Advertisement
Advertisement