Read in English
This Article is From Sep 25, 2018

ஆந்திரா எம்.எல்.ஏ.-வைக் கொன்று தப்பியோடிய மாவோயிஸ்டுகள் - வீடியோ காட்சி வெளியீடு

ஆந்திர எம்.எல்.ஏ.சுட்டுக் கொல்லப்பட்டதில் பாதுகாப்பு குறைபாடுதான் காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
தெற்கு ,
Hyderabad:

ஆந்திராவில் உள்ள அரக்கு பகுதிக்கு 2 நாட்களுக்கு முன்பாக தங்களது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் (Kidari Sarveswar Rao) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் சென்றுள்ளனர். அவர்களை சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு சமீபத்தில் மாறியிருந்தார். இவரை கொல்ல மாவோயிஸ்டுகள் நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் படுகொலையை நிகழ்த்திய பின்னர் மாவோயிஸ்டுகள் தப்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

போலீசார் அளித்த தகவலின்படி மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு பலமுறை மிரட்டல் வந்துள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

Advertisement