Read in English
This Article is From Nov 02, 2018

ஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில செயலாளர் கொலையை கண்டித்து போராட்டம்

கொலை சம்பவம் நடந்த கிஷ்த்வார் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கொடி அணிவகுப்பை நடத்தினர். நேற்று பாஜக மாநில செயலாளர் அனில் பாரிஹரும், அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Advertisement
இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் பாஜக தொண்டர்கள் கோஷமிட்டபோது எடுத்த படம்.

Jammu:

ஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில செயலாளர் கொலையை கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் பாஜக மாநில செயலாளர் அனில் பாரிஹர் மற்றும அவரது சகோதரர் அஜீத் பாரிஹர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பாஜக தொண்டர்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஜம்மு, ரியாசி, உதம்பூர், ரம்பன், கத்துவா, பதேர்வா மற்றும் சம்பா ஆகிய பகுதியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.இங்கெல்லாம் போராட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தியும், பாகிஸ்தான் கொடிகளை தீயிட்டு எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதேபோன்று பழைய ஜம்மு சிட்டி மற்றும் சில இடங்களில் முழு அடைப்பு நடைபெற்றுள்ளது. இதற்கிடையே சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக இந்திய ராணுவத்தினர் கொடி அணி வகுப்பை கிஷ்த்வார் பகுதியில் நடத்தினர்.

Advertisement