This Article is From Aug 27, 2018

120.4 அடியைத் தொட்டது மேட்டூர் அணை; திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

தொடர்ந்து நீர்வரத்து சீராக இருந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120.4 அடியைத் தொட்டது

Advertisement
தெற்கு Posted by

தொடர்ந்து நீர்வரத்து சீராக இருந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120.4 அடியைத் தொட்டது. அணையின் அதிகபட்ச கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது. கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர்வரத்து 26,000 கன அடியில் இருந்து 28,000 கன அடியாக நேற்று உயர்ந்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை 25,800 கன அடியாக இருந்த நீர்வெளியேற்றம் இன்று பிற்பகல் அளவில் 27,800 கன அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement