This Article is From Jan 04, 2020

அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, பேட்டிங் செய்து அசத்திய முதல்வர் எடப்பாடி!!

தொடர்ந்து, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான போட்டிகளை துவக்கி வைத்த முதலமைச்சர் அங்கு கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்

Advertisement
தமிழ்நாடு Edited by

அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்தார்

சென்னையில் இன்று தொடங்கிய ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார்.

ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை எதிரே உள்ள மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. 

இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, தொப்பியுடன் வந்திருந்தார்.

தொடர்ந்து, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான போட்டிகளை துவக்கி வைத்த முதலமைச்சர் அங்கு கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்தார்.

மேலும் டிஜிபி திரிபாதியும் முதலமைச்சருக்கு பந்து வீச, அவர், உற்சாகமாக அதனை எதிர்கொண்டார். இதனை பார்த்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

Advertisement