This Article is From Dec 18, 2019

இரண்டாக பிரிக்கப்படுகிறது சென்னை அண்ணா பல்கலைக் கழகம்!! ஆய்வு செய்ய குழு அமைப்பு!

மாண்புமிகு அண்ணா கல்வி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் என சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது. அண்ணா பல்கலை. சட்டம் 1978-யை திருத்தம் செய்து புதிய சட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இரண்டாக பிரிக்கப்படுகிறது சென்னை அண்ணா பல்கலைக் கழகம்!! ஆய்வு செய்ய குழு அமைப்பு!

மாண்புமிகு அண்ணா கல்வி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலை. என இரண்டாக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Chennai:

சென்னையில் செயல்பட்டு வரும் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்தை மாண்புமிகு அண்ணா கல்வி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் ( Anna Institute of Eminence and Anna University) என இரண்டாக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்தப் பணியை மேற்கொள்வதற்காக கல்வித்துறை, விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

மாண்புமிகு அண்ணா கல்வி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் என சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது. அண்ணா பல்கலை. சட்டம் 1978-யை திருத்தம் செய்து புதிய சட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எமினென்ஸ்ஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்பின்னர் இட ஒதுக்கீடு தொடரும் என்று மத்திய அரசு தெளிவு படுத்தியது. இதையடுத்து, பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 

Click here for more Education News
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.