Mathura: மதுரா: 12 வயது சிறுமையை பாலியல் பலாத்கார செய்த இளைஞனுக்கு உதவிய உறவுக்காரப் பெண், மதுரா கிராமத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன் நடைப்பெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த பெண் வீட்டிற்கு அழைத்ததிருக்கிறார். அப்போது அவரது கணவனின் சகோதரர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அதை படம் பிடித்ததாகவும் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஊரெங்கும் பரவியதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இதை குறித்து அறிய வந்ததாக கூறப்படுகிறது. நடந்த அசம்பாவிதம் குறித்து சிறுமியிடம் விசாரிக்கையில், உண்மையை வெளியே கூறினால், தனது தம்பியை கொன்றுவிடுவதாக குற்றவாளி மிரட்டியதால், அமைதியாக இருந்ததாக கூறி கதறினார்.
இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றச்செயலுக்கு துணை போன உறவுக்கார பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் நடைப்பெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த பெண் வீட்டிற்கு அழைத்ததிருக்கிறார். அப்போது அவரது கணவனின் சகோதரர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அதை படம் பிடித்ததாகவும் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றச்செயலுக்கு துணை போன உறவுக்கார பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
COMMENTS
Advertisement