ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் சனிக்கிழமை காணமல் போன ஆறுவயது பள்ளிச் சிறுமி சீருடையிலேயே இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பள்ளி பெல்ட்டால் கழுத்தை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமியின் உடல் கெட்டாடி கிராமத்திற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் புதர்களுக்கு அருகில் கிடந்தது. மது பாட்டில்கள், தின்பண்டங்கள் மற்றும் இரத்தக் கறைகளும் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை சிறுமியின் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதாகவும் அதில் கலந்து கொண்ட சிறுமி காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வராத காரணத்தினால் சிறுமியைத் தேடத் தொடங்கியுள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை உறவினர் மற்றும் பண்ணைகளில் தேடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் உடல் இரத்தக் கரைபடிந்த உடல் பள்ளியிலிருந்து அரை கி.மீ தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் குழந்தையின் கொலை குறித்து விசாரித்து வருகிறது. சிறுமியின் ஊரைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறுமியின் உடலை வேறு இடத்திற்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்று விட்டனர்.
சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கிற்காக சிறப்பு குழுக்கள் அமைத்து விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, முதல்வர் அசோக் கெஹ்லோட் ஞாயிற்றுக் கிழமை குற்ற செயலில் ஈடுபடவர்களை ஒருபோதும் காப்பாற்றபட மாட்டார்கள் என்று கூறினார். மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடான செயல் என்றும் கூறினார்.