This Article is From Dec 11, 2019

Viral Pic: விளையாட்டு இடைவேளையின் போது 7மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் மிசோரம் மாநில வீராங்கணை

மிசோரம் மாநில விளையாட்டு 2019க்கான விளையாட்டு போட்டியில் இடைவெளியின்போது தனது 7 மாத குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதை பார்க்க முடிந்தது

Viral Pic: விளையாட்டு இடைவேளையின் போது 7மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் மிசோரம் மாநில வீராங்கணை

பலரும் விளையாட்டு வீரங்கணையை பாராட்டியுள்ளனர்.

கைப்பந்து வீரர் தனது குழந்தைக்கு விளையாட்டுக்கு இடையில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கைப்பந்து வீரரான லால்வெண்ட்லுவாங்கி, மிசோரமில் உள்ள துயுகம் தொகுதி அணியின் விளையாட்டு வீரர். மிசோரம் மாநில விளையாட்டு 2019க்கான  விளையாட்டு போட்டியில் இடைவெளியின்போது தனது 7 மாத குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதை பார்க்க முடிந்தது. 

“ஒரு விளையாட்டுக்கு இடைவெளியில் தனது 7 மாத குழந்தைக்கு உணவளிக்கும் தருணம்” என்று பேஸ்புக் பதிவர் நிங்லூன் ஹங்கல் எழுதி பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் கைப்பந்து வீரர் லால்வெண்ட்லுவாங்கி நிறைய பாராட்டுகளை பெற்றுத்தந்தது. 

“அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகியவற்றின் அணுகுமுறையால் ஒரு விளையாட்டுப் பெண்மணி மற்றும் தாய்மையின் இரட்டை பொறுப்புகளை முன்னேற்றத்தில் எடுத்துக் கொண்டதற்காக மக்கள் அவரை பாராட்டுவதால் படம் வைரலாகியுள்ளது” 

லால்வெண்ட்லுவாங்கி தனது ஏழு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை கண்டு மாநில விளையாட்டு அமைச்சர் ரூ. 10,000 வழங்குவதற்கு வழிவகுத்தது.

மிசோரம் மாநில விளையாட்டு 2019 டிசம்பர் 9 முதல் 15 வரை நடைபெறுகிறது. 

Click for more trending news


.