This Article is From Nov 02, 2019

“நாங்க மிட்டாய் கொடுத்தோம்… அப்ப நீங்க அல்வா கொடுத்தீங்களா…”- Edappadi-யை தெறிக்கவிட்ட Stalin!

தற்போது தமிழகத்தில் நடப்பது எடப்பாடி ஆட்சி அல்ல. எடுபிடி ஆட்சி - MK Stalin

“நாங்க மிட்டாய் கொடுத்தோம்… அப்ப நீங்க அல்வா கொடுத்தீங்களா…”- Edappadi-யை தெறிக்கவிட்ட Stalin!

MK Stalin - நீங்கள் என்ன வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்து வென்றீர்களா..?

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்து பொது மேடையில் பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin). 

“நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, வரலாற்று வெற்றியைப் பெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ‘திமுக, வாக்காளர்களுக்கு மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டது,' என்றார். அதை வாதத்துக்கு ஒப்புக் கொள்கிறேன், என்று வைத்துக் கொள்ளுங்கள். தற்போது, நீங்கள் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்களே… நீங்கள் என்ன வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்து வென்றீர்களா..?,” என மேடையில் பேசியபோது கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து அவர், “நான் பலமுறை ஒன்றைச் சொல்லி வருகிறேன். அதை அவமானப்படுத்துவதற்காகவோ, விமர்சனத்துக்காவோ, கேலிக்காகவோ அல்ல. தற்போது தமிழகத்தில் நடப்பது எடப்பாடி ஆட்சி அல்ல. எடுபிடி ஆட்சி. மத்திய அரசு ஒரு திட்டம் குறித்து கண் அசைக்கும் முன்னரே, அதை தமிழக அரசு செய்து முடித்துவிடுகிறது,” என்று அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்தார். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

.