This Article is From Jul 29, 2019

ஆட்சி நீடிக்க அமைச்சர்களுக்கு மாதா மாதம் படி அளக்கிறது அரசு: மு.க.ஸ்டாலின்

நீங்கள் வென்ற ஒரே ஒரு இடத்தில் மிட்டாய் கொடுத்தீர்களா அல்லது அல்வா கொடுத்து அங்கிருக்கும் மக்களை ஏமாற்றினீர்களா?

Advertisement
தமிழ்நாடு Written by

ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்லாமல், அமைச்சர்களுக்கும் மாதா மாதம் படி அளந்து கொண்டிருக்கிறது அரசு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, நம்முடைய அணியின் சார்பில் 39வது எம்.பி.யாக நம் வேட்பாளர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்திற்கு போகப் போகின்றார் என்பது உறுதி. அதில், எந்த மாற்றமும் கிடையாது. நியாயமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலிலேயே கதிர் ஆனந்த் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டு செய்த சூழ்ச்சியால் அது நடக்காமல் போனது. 

மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள் மிட்டாய் கொடுத்து வாக்கு வாங்கி விட்டார்கள் என்று, ஒரு தவறான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நான் கேட்கின்றேன் மக்களை ஏமாற்றியதால் 38 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நீங்கள் வென்ற ஒரே ஒரு இடத்தில் மிட்டாய் கொடுத்தீர்களா அல்லது அல்வா கொடுத்து அங்கிருக்கும் மக்களை ஏமாற்றினீர்களா? எனவே, இவற்றையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள் இவற்றிற்கெல்லாம் நீங்கள் சரியான பதில் தர வேண்டும்.

அவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுக ஆட்சியை அழிக்க முடியாது என்கிறார். நான் கனவு காண வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. விரைவில் அது நினைவாக நடக்கப் போகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்.

Advertisement

மோடியின் தயவில் பாஜக ஆட்சியின் ஒத்துழைப்போடு, இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதே தவிர வேறொன்றும் அல்ல அது தான் உண்மையும் கூட. எனவே இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்கும் நிலைத்து நீடித்து வைத்துக் கொள்ளவும், அவர்கள் மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அங்கு இருக்கக்கூடிய ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்லாமல், அமைச்சர்களுக்கும் மாதா மாதம் படி அளந்து கொண்டிருக்கின்றார்கள் என்று அவர் கூறினார்.

Advertisement