Read in English
This Article is From Oct 15, 2018

எம்.என்.சி பெண் ஊழியருக்கு சக ஊழியர்களால் நேர்ந்த கொடூரம்!

வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி அழைத்துச் சென்றபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்கள்.

Advertisement
Delhi

பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் தன்னுடைய புகாரை பதிவு செய்தார்.

Highlights

  • அப்பெண்ணை சக ஊழியர்கள் வேலை முடிந்த பின் வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச்
  • மயக்கமடையச் செய்து கற்பழித்துள்ளார்கள்.
  • மயக்கம் தெளிந்தபின் வீட்டிற்கு சென்ற அப்பெண், வீட்டில் உள்ளவர்களிடம் நடந்
New Delhi:

பிர்ஜூ(25) மற்றும் வினோத் குமார்(31) என்ற இருவரும் தங்களுடன் பணிபுரியும் பெண்ணை அலுவலகம் முடிந்ததும் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். இதனால் அப்பெண் மயக்கமடைந்துள்ளார்.

தன்னிலை மறந்த அப்பெண்ணை இருவரும் கற்பழித்துள்ளனர். அதன் பின் அவரை தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் கொண்டு போய் விட்டதாக, போலீசார் கூறினார். மயக்கம் தெளிந்தபின் வீட்டிற்கு சென்ற அப்பெண், வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததை கூறி, காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கப்பட்ட அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், கற்பழிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

 

Advertisement