தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது-
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தின் உள்மாவட்டங்களை பொறுத்தவரையில், இயல்பான வெப்பத்தை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்.
Advertisement
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
COMMENTS
Advertisement