நான்காவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை சமயோசிதமாக காப்பாற்றிய தாய்க்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கொலம்பியா மாகணத்தில் மெடலின் என்ற பகுதியில் லிப்டில் இருந்து அம்மாவும் சிறுவனும் வந்தனர். நான்காவது மாடிக்கு வந்த சில நொடிகளில் சிறுவன் பால்கனியில் உள்ள கம்பியின் பக்கம் சென்று விடுகிறான்.
கம்பியை பிடித்தபடி பார்த்த சிறுவன் தவறி விழ தாய் உடனடியாக சுதாரித்து சிறுவனின் கால்களை பிடித்து கொள்ள குழந்தை காயம் ஏதுமின்றி தப்பித்து விட்டான். தாய் மெதுவாக குழந்தையை இழுத்து காப்பாற்றி விட்டார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
.
Advertisement
இந்த வீடியோ காட்சியினை பலரும் பகிர்ந்து தாயின் சமயோசிதமான செயலை பாராட்டியுள்ளனர். சிலர் ‘அம்மாவினால் மட்டும் தான் நொடியில் செயல்படமுடியும் ‘ என்று தெரிவித்துள்ளனர்
Advertisement
COMMENTS
Advertisement