Read in English
This Article is From Nov 24, 2018

டெல்லியின் சிக்னேச்சர் பாலத்தில் மீண்டும் விபத்து… 2 நாளில் 3 பேர் பலி!

Delhi Signature Bridge accident: தலைநகர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட சிக்னேச்சர் பாலத்தில் இன்று இன்னொரு இரு சக்கர வாகன விபத்து நடந்துள்ளது

Advertisement
இந்தியா

Signature Bridge Accident: நேற்று, சிக்னேச்சர் பாலத்தில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தினால், வாகனத்தில் வந்த 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர்

New Delhi:

தலைநகர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட சிக்னேச்சர் பாலத்தில் இன்று இன்னொரு இரு சக்கர வாகன விபத்து நடந்துள்ளது. விபத்தில் வாகன ஓட்டி உயிரிழந்துள்ளார். 

நேற்று, சிக்னேச்சர் பாலத்தில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தினால், வாகனத்தில் வந்த 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், இன்னொரு விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், விபத்து நடந்த இடத்தில் பதற்றம் நிலவுகிறது. 

இன்று 24 வயதாகும் ஷங்கர் மற்றும் 17 வயதாகும் அவரது உறவினர் தீபக் ஆகியோர், நாங்கலோயிலிருந்து வட கிழக்கு டெல்லிக்கு, சிக்னேச்சர் பாலம் மூலம் பயணப்பட்டுள்ளனர். காஸியாபாத்தைச் சேர்ந்த இருவரும் விபத்தில் சிக்கியதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஷங்கர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement


 

Advertisement