ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை “உண்மையான கர்மயோகி” மற்றும் “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று பாராட்டினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் சர்தார் வல்லபாய் படேலைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
காந்தி நகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக் கழகத்தின் மாநாட்டு விழாவில் உரையாற்றிய முகேஷ் அம்பானி “அமித் ஷா, நீங்கள் ஒரு உண்மையான கர்மயோகி. நீங்கள் உண்மையிலேயே எங்கள் நாட்டின் இரும்பு மனிதர். குஜராத், தற்போது இந்தியாவுக்கான உங்களைப் போல் ஒரு தலைவரை கொண்டிருப்பது பெரும்பாக்கியம்” என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமித் ஷாவும் கலந்து கொண்டார். மேலும் பேசிய முகேஷ் அம்பானி “உங்களின் லட்சியங்களை குறைக்க வேண்டாம். ஒருபோதும் பெரிதாக கனவு காணத் தயங்காதீர்கள். நாளைய இந்தியா உங்களின் லட்சியங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற ஏராளாமான வாய்ப்புகளை உருவாக்கும் என்று எப்போதும் நம்புகள்” என்றும் கூறினார்.
அமித் ஷா தனது உரையில் “ 2014 வரை இந்தியாவின் பொருளாதாரத்தை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக அதை உருவாக்க முடிந்ததது” என்று பேசினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)