This Article is From Dec 28, 2018

மும்பையில் பயங்கர தீ விபத்து : முதியவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்

படுகாயம் அடைந்திருந்த முதியவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர் ஒருவரும் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

Mumbai:

மும்பையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி முதியவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மும்பையின் புற நகர் பகுதிகளில் ஒன்றான செம்பூரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இங்குள்ள சர்காம் சொசைட்டி பி. விங் 35 என்ற முகவரியில் உள்ள வீட்டின் 10-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை சுமார் 7.45-க்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர்.

இதற்கிடையே தீ விபத்தில் சிக்கி முதியவர்கள் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவர்களது உயிர் பிரிந்தது.

அவர்கள் சுனிதா ஜோஷி, 72, பாலசந்திர ஜோஷி, 72, சுமன் ஸ்ரீனிவாஸ், 83, சரளா சுரேஷ், 52 மற்றும் லக்ஸ்மி பென் பிரேம்ஜி கங்கர் 83 என போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பெண்டி பஜாரில் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

கடந்த வாரம் 5 நட்சத்திர ஓட்டலிலும், 17-ம்ததி அந்தேரியிலும் தீ விபத்துகள் ஏற்பட்டன. அந்தேரி தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
 

.