This Article is From Jan 27, 2019

மும்பையில் 15 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மும்பையில் 15 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

Mumbai:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கார்கள் பற்றி எரிந்தன. 

வசாய் என்ற பகுதியில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. ஒரு காரில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற கார்களுக்கும் பரவியது. 

இதையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

ஆட்கள் ஏதும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

.