தீ விபத்து குறித்து ட்விட்டரில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன.
மும்பையில் செயல்பட்டு வரும் கெமிக்கல் தொழிற்சாலையின் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகிநகா பகுதியில் உள்ள சுபாஷ் நகர் என்ற இடத்தில் ரசாயன குடோன் செயல்பட்டு வந்தது. தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தொழிற்சாலையில் இருந்து பெரிய அளவில் வெளிவரும் புகை, விண்ணை நோக்கி செல்வதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக மும்பை மக்கள் ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது கிடைத்த தகவலின்படி உயிரிழப்புகள் ஏற்படவில்லை.