This Article is From Aug 03, 2019

பிறந்தநாளன்று பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - 4 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று தனது நண்பரின் வீட்டிலிருந்து, பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அந்த பெண் திரும்பி வரும்போது, நான்கு பேர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பிறந்தநாளன்று பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - 4 பேர் மீது வழக்குப்பதிவு!

இது குறித்து அவர் பல வாரங்களாக யாருக்கும் தெரிவிக்காமல் அழுது கொண்டே இருந்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Mumbai:

19 வயது பெண்ணிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று தனது நண்பரின் வீட்டிலிருந்து, பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அந்த பெண் திரும்பி வரும் வழியில், நான்கு பேர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறும்போது, இந்த சம்பவம் குறித்து பல வாரங்களாக யாருக்கும் தெரிவிக்காமல் அந்த பெண் அழுது கொண்டே இருந்துள்ளார். 

அவரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்தே, அவர் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். 

இதுகுறித்து காவல் ஆய்வாளர் தீபக் விஜய் கூறும்போது, 376 (பலாத்காரம்), 376D (கூட்டு பாலியல் பலாத்காரம்) 34 (கிரிமினல் குற்றம்) உள்ளிட்ட தண்டனை பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத அந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து, இது குறித்து விசாரணையும் நடந்த வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

Investigation in the case is underway.

.