This Article is From Jan 30, 2019

காதலியின் சகோதரர்கள் கத்தியால் குத்தியதில் காதலன் உயிரிழப்பு

மும்பையில் சைஃப் அலி சராபத் என்ற இளைஞர்கள் பக்கத்து வீட்டு பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

காதலியின் சகோதரர்கள் கத்தியால் குத்தியதில் காதலன் உயிரிழப்பு

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Mumbai:

மும்பையில் காதலியின் சகோதரர்கள் கத்தியால் குத்தியதில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாலத் பகுதியை சேர்ந்த சைஃப் அலி சராபத் என்ற அந்த இளைஞர் பக்கத்து வீட்டு பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் திருமணம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர். ஆனால் இதற்கு அந்தப் பெண்ணின் சகோதரர்களான பத்ருதீன் (வயது 19), அஜ்மல் (வயது 23) ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், காதலியின் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என எண்ணிக்கொண்டு சராபத் அங்கு சென்றுள்ளார். இதன்பின்னர் காதலர்கள் இருவரும் பபேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காதலியின் சகோதரர்கள் சராபத்தை அடித்து உதைத்தனர். 

அவர்களின் ஒருவன் சராபத்தை கத்தியால் குத்தினான். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சராபத் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரையும் போலீசார் பிடித்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

.