Read in English
This Article is From Nov 22, 2018

தன்னம்பிக்கையால் புற்றுநோயிலிருந்து மீண்ட முன்னாள் பாலிவுட் நடிகை

சிகிச்சைக்கு பின் தனது நெடுநாள் தோழியான காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை “மதிப்புக்க நட்பு” என்ற கேப்ஸனுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்

Advertisement
Entertainment Posted by
New Delhi:

புகழ்பெற்ற முன்னாள் பாலிவுட் நடிகையும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான நாவிசா அலீ, தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை எப்படி வென்றார் என தனது கருத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1979- வெளியான ஜுனுன் (Junoon) என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நாவிசா அலி, பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இறுதியாக பீவி ஆவூர் கேங்ஸ்டர் 3 (Biwi Aur Gangster 3) என்ற படத்தில் நடித்திருந்தார்.

61 வயதான நாவிசா அலி, பிரபல கிரிக்கெட் வீரர் கர்னல் ஆர்.எஸ். சூதீயை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு வெள்ளித்திரையில் இருந்து விலகினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 3ஆம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.மேலும் அவருக்கு வரும் ஜூன் மாதம் பேரக்குழந்தை பிறக்கப் போவதாகவும் அக்குழந்தையை பார்ப்பதற்காகவே தான் புற்றுநோயை வென்றதாக மும்பை மிரர் பத்ரிகையிடம் கூறியுள்ளார்.
 

 

‘என் பிள்ளைகளே நான் நலம் பெற்றதற்கு மிக முக்கியமான காரணம். என் மகள் தற்போது 3 மாதம் கருவுற்று இருக்கிறார். எனது மூன்றாவது பேரக்குழந்தையை பார்க்க நான் நலமாக இருக்க வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது' என மும்பை மிரர் பத்ரிகையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு பெரிடோனினல் மற்றும் கருப்பை புற்றுநோய் இருந்ததாகவும் இதை சமூக ஊடகங்களில் பகிர்வதால் பிறருக்கும் அது நம்பிக்கை கொடுக்கும் எனவும் அதில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை குறித்து அறிந்ததும் தன் கணவர் கர்னல் ஆர்.எஸ். சூதீ மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும். ஆனால் சில நாட்கள் கழித்து தன்னுடைய மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தன்னுடன் நடைபயிற்சி போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டதாக தனது பதிவில் கூறினார்.
 

 

Advertisement

சிகிச்சைக்கு பின் தனது நெடுநாள் தோழியான காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை “மதிப்புக்க நட்பு” என்ற கேப்ஸனுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

Advertisement