বাংলায় পড়ুন
This Article is From Jul 03, 2020

நாய் இறைச்சி விற்பனைக்கு நாகலாந்தில் அதிரடி தடை விதிப்பு!

நாய் இறைச்சி ஏற்றுமதி, சந்தைகள், நாய் இறைச்சியால் சமைக்கப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்டுள்ள நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கு நாகலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisement
இந்தியா

நாய் இறைச்சி பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. 

Highlights

  • நாகலாந்தில் நாய் இறைச்சி தொடர்பான புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின
  • மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினர் கடும் நெருக்கடி கொடுத்தனர்
  • நாய் இறைச்சிக்கு தடை விதித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Kohima:

நாய் இறைச்சி விற்பனைக்கு நாகலாந்து மாநிலத்தில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நாகலாந்து அரசின் தலைமை செயலர் ன்று பிறப்பித்துள்ளார். 

நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் நாகலாந்தில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது-

நாய் இறைச்சி ஏற்றுமதி, சந்தைகள், நாய் இறைச்சியால் சமைக்கப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்டுள்ள நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கு நாகலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக திமாப்பூர் சந்தையில் நாய்கள் விற்பனை செய்யப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் தொடர்ச்சியாக அரசு இந்த அதிரடி உத்தரவை எடுத்துள்ளது. 

இதேபோன்று முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கவிஞருமான பிரிதிஷ் நந்தி, நாய் இறைச்சிக்கு எதிரான அமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தார். 

Advertisement

நாய் இறைச்சியை சாப்பிடுவது மனிதத் தன்மையற்றது. சட்டவிரோதமானது. இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

நாகலாந்து பொதுமக்களும், சமூக வலைதளங்கள் மூலமாக முதல்வருக்கு இதேகோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், நாய் இறைச்சி பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. 

Advertisement