Read in English
This Article is From Aug 29, 2018

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா விபத்தில் பலி

இன்று காலை நெல்லூரில் நடக்க இருந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, ஃபார்ச்சூனர் காரை தானே ஓட்டிச் சென்றுள்ளார்

Advertisement
இந்தியா
Hyderabad:

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா(61), தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் பலியானார். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். சினிமா நடிகரும் கூட.

தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை 6.30 மணியளவில் நல்கொன்டா மாவட்டத்தில் விபத்து நடந்துள்ளது.

இன்று காலை நெல்லூரில் நடக்க இருந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, ஃபார்ச்சூனர் காரை தானே ஓட்டிச் சென்றுள்ளார். 9 மணிக்குள் திருமணத்துக்கு செல்ல வேண்டும் என அதிவேகமாக காரை இயக்கியுள்ளார். 150 கிலோ மீட்டர் வேகம் சென்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அப்படி செல்லும் போது நிலை தடுமாறி சாலை டிவைடரில் இடித்து, கார் கவிழ்ந்துள்ளது.

Advertisement

நந்துமுரியுடன் பயணித்த மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட நந்தமுரிக்கு மார்பகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

ஹரிகிருஷ்ணாவின் மூத்த மகன் சாலை விபத்தில் 2014-ம் ஆண்டு பலியானார். இரண்டாவது மகன் ஜூனியர் என்.டி.ஆரும் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement