New Delhi:
தன் தாயை அடித்த தாயின் இரண்டாம் கணவரை 24 வயது இளைஞர் முன்னா கான் சுட்டுக் கொன்றுள்ளார். டெல்லியில் நரேலா பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்து விட்டு தானே காவல் நிலையத்துக்கு தகவலும் அளித்துள்ளார்.
காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக காவல்துறையினர் அங்கு சென்று குற்றவாளியை கைது செய்துள்ளனர்.விசாரணையில் தாயின் இரண்டாம் கணவர் அதிகமாக தன் தாயை அடிப்பார் என்றும் அதனால் அவரை சுட்டுக் கொன்றார் என்றும் தெரிய வந்துள்ளது.
முன்னா கானிடம் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. அதை அவர் பீகாரில் இருந்து வாங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement
முன்னா கான் டீ கடை ஒன்றினை நடத்தி வருகிறார்.
COMMENTS
Advertisement