Read in English
This Article is From Jul 29, 2020

என்ன சொல்கிறது புதிய கல்விக் கொள்கை? முக்கிய அம்சங்கள்!

10 + 2 அமைப்பு 5 + 3 + 3 + 4 பள்ளி பாடத்திட்டத்துடன் மாற்றப்பட்டுள்ளது. இக்கல்வி 3 ஆண்டு மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும். இந்த முறை இது பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், மனநல திறன்களை வளர்ப்பதற்கான உலகளாவிய கட்டமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Posted by

"கல்வித்துறையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம்" என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

Highlights

  • 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது உள்ளூர் / பிராந்திய மொழி கட்டாயம்
  • ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்திருந்த கல்விமுறையில் மாற்றம்
  • 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்,
New Delhi:

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக அனைத்து பள்ளிகளிலும் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது உள்ளூர் / பிராந்திய மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்திருந்த கல்விமுறையில் 2020-ல்தான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப், 10 + 2 பள்ளிக் கட்டமைப்பில் மாற்றம் மற்றும் நான்கு ஆண்டு இளங்கலைத் திட்டம் ஆகியவற்றுடன் தொழிற்கல்வியையும் இந்தக் கொள்கை முன்மொழிகிறது. மேலும் இந்த கல்விக் கொள்கை, தற்போது பள்ளிகளுக்கு வெளியே இருக்கும் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியின் நீரோட்டத்துடன் இணைக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை "முழு மனதுடன் வரவேற்றேன்", இது "கல்வித்துறையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம்" என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

இந்த புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் அனைத்து வகுப்பிலும் ஒரு மொழியாக அமல்படுத்தப்படும். ஆனால், இது கட்டாயமல்ல என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய கல்விக் கொள்கையை பல தென் மாநிலங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டமாக எதிர்த்தன.

Advertisement

10 + 2 அமைப்பு 5 + 3 + 3 + 4 பள்ளி பாடத்திட்டத்துடன் மாற்றப்பட்டுள்ளது. இக்கல்வி 3 ஆண்டு மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும். இது பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், மனநல திறன்களை வளர்ப்பதற்கான உலகளாவிய கட்டமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேர்வுகளுக்குப் பதிலாக மாணவர்கள் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுதினால் போதுமானது. இது "திறனை அடிப்படையாகக் கொண்டது, கற்றல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் பகுப்பாய்வு, விமர்சன சிந்தனை மற்றும் கருத்தியல் தெளிவு போன்ற உயர்-வரிசை திறன்களை சோதிக்கிறது” என மத்திய அரசு கூறுகின்றது.

Advertisement

10 மற்றும் 12 வகுப்புகளுக்கு வாரிய தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும், ஆனால் இவை முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு திருத்தியமைக்கப்படும். இந்தக் கொள்கை, மாணவர்களின் பாடத்திட்ட சுமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது, மேலும் அவர்களை "பல-ஒழுங்கு" மற்றும் "பல மொழி" திறனுள்ளவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மாணவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக நான்கு ஆண்டு இளங்கலை திட்டத்தை NEP 2020 முன்மொழிகிறது. நான்கு ஆண்டு படிப்பை முடித்த பின்னர் பல பிரிவு இளங்கலை பட்டம் வழங்கப்படும். இந்த படிப்பில் ஓராண்டு இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் தொடரலாம். இந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் மாணவர்கள் டிப்ளோமா பட்டத்தை பெறுவார்கள், 12 மாதங்களுக்குப் பிறகு வெளியேறுபவர்கள் தொழிற்கல்வி / தொழில்முறை படிப்பைப் படித்திருப்பார்கள்.

Advertisement

குறிப்பிடத்தக்க அம்சமாக இனி எம்.பில் படிப்புகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய உயர் கல்வி கவுன்சில் (HECI) அமைக்கப்படும். 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட நிறுவனங்களில் கவனம் செலுத்தப்படும். கவுன்சிலின் குறிக்கோள்களில் மொத்த சேர்க்கை விகிதத்தை 2035 க்குள் 26.3 சதவீதத்திலிருந்து (2018) 50 சதவீதமாக உயர்த்துவது ஆகும். ஆயினும், HECI-க்கு சட்ட மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் அதிகார வரம்பு இருக்காது.

Advertisement

ஒழுங்குமுறைக்கான தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை கவுன்சில், தரங்களை நிர்ணயிப்பதற்கான பொது கல்வி கவுன்சில், நிதியுதவிக்கான உயர் கல்வி மானிய கவுன்சில் மற்றும் அங்கீகாரத்திற்கான தேசிய அங்கீகார கவுன்சில். ஆகிய நான்கு அம்சங்களை HECI கொண்டிருக்கும்.

Advertisement