This Article is From Oct 01, 2018

விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

சென்னையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணத்தில் விமானப்படைக்கு சொந்தமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விமானப்படை பயிற்சிகள், பேரிடர் மீட்பு பணி ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெறும். இந்த நிலையில், இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் 3 பேர் இருந்ததாகவும், அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சில பாகங்கள் சேதம் அடைந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.