Read in English
This Article is From Apr 24, 2020

முஸ்லீம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது!

Mumbai: மத நம்பிக்கைகளை சீற்றப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

முஸ்லீம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது! (Representational)

Highlights

  • முஸ்லீம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது!
  • மத நம்பிக்கைகளை சீற்றப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு
  • டெலிவரி நபர் புகாரின் பேரில் கைது நடவடிக்கை

மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகை பொருட்களை முஸ்லீம் டெலிவரி நபரிடமிருந்து வாங்க மறுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் கூறும்போது அந்த நபர் மீது வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டது, மத நம்பிக்கைகளை சீற்றப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மும்பையின் புறநகர் மீரா சாலையை சேர்ந்தவர் கான்ஷியாம் சதுர்வேதி, (50). இவர் கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வீட்டில் டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். ஏப்.21ம் தேதியன்று காலை பொருட்கள் அவரது இல்லத்திற்கு வந்துள்ளது. 

ஆனால், சதுர்வேதி டெலிவரி நபர் உஸ்மான் படேலிடம் இருந்து அந்த பொருட்களை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதே, முஸ்லீம் நபரிடம் டெலிவரி கொடுத்து விடக்கூடாது என்று தான் குறிப்பிட்டு கூறியதாகவும் அவர் விவாதம் செய்துள்ளார். 

Advertisement

இந்த உரையாடல்களை அனைத்தையும் தனது போனில் பதிவு செய்த படேல் (32), இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சதுர்வேதி கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக கடந்த வருடம் ஜூலை மாதத்தில், மத்தியப் பிரதேசத்தில் இதேபோல், இந்த அல்லாத நபர் உணவு டெலிவரி செய்ததன் காரணமாக அதனை வாங்க மாட்டேன் என்று வாடிக்கையாளர் ஒருவர் பிடிவாதம் பிடித்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஜொமேட்டோ நிறுவனம் அதற்கு பதிலளிக்கும் வகையில், உணவுக்கு மதம் கிடையாது என்றும், அதுவே மதம் தான் என்று பதிவிட்ட கருத்துகள் ட்விட்டரில் வைரலானது. 

Advertisement

இதேபோல், ஐதராபாத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில், ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தவர் முஸ்லீம் டெலிவரி நபரிமிருந்து அதனை வாங்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை மீரா சாலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 100ஐ தாண்டியுள்ளது. அங்கு மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

மும்பையில் 4,025 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,427 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று மட்டும் புதிதாக 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 522 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement