বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 17, 2020

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா: WHO கொடுத்த அதிர்ச்சித் தகவல்!

சீனாவின் உஹான் நகரத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ், தற்போது 130 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

Advertisement
உலகம் Edited by

இந்தியாவில் இந்த வைரஸால் 110 பேர் பாதிக்கப்படைந்துள்ளனர். 

Highlights

  • உலக சுகாதார அமைப்பு இது குறித்த தகவலை அளித்துள்ளது
  • 130 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது
  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா தோன்றியது

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 14,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பான WHO, அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கிறது. இதனால் உலகளவில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, சுமார் 1,67,500 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13,903 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்போட்டவர்களின் எண்ணிக்கை 1,67,511 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,606 ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவின் உஹான் நகரத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ், தற்போது 130 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் 110 பேர் பாதிக்கப்படைந்துள்ளனர். 
 

Advertisement
Advertisement