This Article is From Apr 18, 2019

''மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; தெளிவாக உள்ளனர்'' : வாக்களித்த பின் வடிவேலு பேட்டி

Lok Sabha Elections: சமூக வலை தளங்களால் உலகம் உள்ளங்கைக்கு வந்து விட்டது. பெற்றோர் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விளக்கும் அளவுக்கு இளைஞர்கள் தெளிவு பெற்றுள்ளனர் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

Elections 2019: பிரபலங்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதில் இளைஞர்கள் தெளிவாக உள்ளனர் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று அதிகாலை முதற்கொண்டே வாக்களித்து வருகின்றனர். 

நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் முதலில் அவருக்கு வாக்கு மறுக்கப்பட்டு பின்னர் தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் வாக்களித்தார். 
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது வாக்கை சென்னையில் பதிவு செய்தார். இதன்பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

தேர்தல் என்பது திருவிழாவுக்கு சமம். மக்கள் சிந்தித்து ஓட்டுப் போட வேண்டும் என்று இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்கான நேரம் முடிந்து விட்டது. மக்களுக்கு எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

Advertisement

சமூக வலைதளங்கள் மூலமாக இன்றைய இளைஞர்கள் தெளிவு பெற்றுள்ளனர். பெற்றோர் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விளக்கும் அளவுக்கு அவர்களது அறிவு உள்ளது. இந்த தேர்தலுக்கு பின்னர் மக்களுக்கு நல்ல விடிவு காலம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு வடிவேலு தெரிவித்தார். 

Advertisement
Advertisement