This Article is From Sep 11, 2018

தெலுங்கானாவில் புதிய கூட்டணி; குடியரசு தலைவர் ஆட்சிஅமைக்க வலியுறுத்தல்

தெலுங்கானா சட்டசபையை கலைக்கப்பட்டு, இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்கிறார்.

தெலுங்கானா சட்டசபையை கலைக்கப்பட்டு, இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்கிறார்.

Hyderabad:

தெலுங்கானாவில் மீண்டும் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என சந்திரசேகர் ராவ் நம்பிக்கையுடன் உள்ளார். இப்போது அங்கு புதிய கூட்டணி உருவாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை அமைத்துள்ளன. இன்று மாலை, இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினார்கள், அப்போது மாநிலத்தில் சட்டசபையை கலைக்க வேண்டும், குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன

மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் முதல்வராக தொடர்ந்தால் உண்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறாது, முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளியதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் எனவும் புதிய கூட்டனி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

.