சென்னை உயர் நீதிமன்றத்துக்கு (Madras High Court), பாட்னா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி, தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம், கடந்த 15 ஆம் தேதி சந்தித்து, இது குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த சந்திப்பின்போது, மேகலாயாவில் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டல், மத்திய பிரதேச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருபுரா நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கரோல், பாட்னா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள் குறித்தான பரிந்துரை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
Advertisement
COMMENTS
Advertisement