This Article is From Nov 12, 2019

Gandhi குடும்பத்திற்கு SPG பாதுகாப்பு நீக்கம்… புதிய படை சார்ஜ் எடுத்தது!

தற்போது நாட்டில் எஸ்பிஜி பாதுகாப்பு இருக்கும் ஒரே நபர் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்.

Gandhi குடும்பத்திற்கு SPG பாதுகாப்பு நீக்கம்… புதிய படை சார்ஜ் எடுத்தது!

தேசிய அளவில் சுமார் 3,000 எஸ்பிஜி  பாதுகாப்புப் படை வீரர்கள், முக்கிய தலைவர்களை பாதுகாப்பதில் பணியமர்த்தப்படுவார்கள். (File)

New Delhi:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi), அவரது மகன் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் பிரியங்கா காந்தி (Priyanka Gandhi)ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்பிஜி (SPG) சிறப்புப் பாதுகாப்பை சென்ற வாரம் நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு சிஆர்பிஎப் (CRPF) துணை ராணுவப் படை வீரர்கள் மூலம், Z+ பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனையொட்டி, இன்று சிஆர்பிஎப் வீரர்கள், காந்தி குடும்பத்திற்குப் பாதுகாப்பு கொடுக்கும் பணியில் சார்ஜ் எடுத்துக் கொண்டனர். 

சில நாட்களுக்கு, எஸ்பிஜி கமாண்டோ படை, சிஆர்பிஎப் வீரர்களுடன் இருந்து, காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்பார்வையிடுவார்கள் எனத் தெரிகிறது. அதன் பின்னர் முழு பொறுப்பையும் சிஆர்பிஎப் எடுத்துக் கொள்ளும் எனப்படுகிறது.

காந்தி குடும்பத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை கணக்கில் கொண்டு இந்த சிறப்புப் பாதுகாப்பு திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள், அரசின் இந்த முடிவு குறித்து அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை என்றும், ஊடகங்கள் வாயிலாகவே இதை கண்டுபிடித்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர். Z  ப்ளஸ் பாதுகாப்பின் மூலம் சுமார் 100 சி.ஆர்.பி.எப் வீரர்களைக் கொண்டு காந்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும். 

தற்போது நாட்டில் எஸ்பிஜி பாதுகாப்பு இருக்கும் ஒரே நபர் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான். தேசிய அளவில் சுமார் 3,000 எஸ்பிஜி  பாதுகாப்புப் படை வீரர்கள், முக்கிய தலைவர்களை பாதுகாப்பதில் பணியமர்த்தப்படுவார்கள்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கொல்லப்பட்ட பிறகு, 1985 ஆம் ஆண்டு, எஸ்பிஜி பாதுகாப்பு, பிரதருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்கப்படி சட்டம் வரையறுக்கப்பட்டது. 

ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டது. 

.