বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 08, 2018

விடுதிக்குள் நுழைந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! - 9 பேர் கைது!

பீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 250 கிமீ தொலைவிலிருக்கும் சவுபால் மாவட்டத்தில் உறைவிட அரசு பள்ளி உள்ளது. இங்கு திடீரென உள்ளே நுழைந்த உள்ளூர் இளைஞர்கள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்

Advertisement
இந்தியா

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர். இன்று மேலும் 6 பேரை கைது செய்துள்ளனர்.

Patna:

பீகார் உறைவிட அரசு பள்ளியில் இருந்த 34 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அனைவரையும் போலீசார் கைது செய்தனர் இதல் பெரும்பாலானோர் இளைஞர்களே. பாலியில் தொல்லையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முயன்ற சிறுமிகளை ஈவு இரக்கமின்றி இளைஞர்கள் அடித்துள்ளனர்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறுகையில், தங்களை தற்காத்துக் கொள்ள முயன்ற சிறுமிகளை தாக்கியது எந்த விதத்தில் நியாமானது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தொந்தரவுக்கு உள்ளான சிறுமிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் தற்போது 24 பேர் விடுதி திரும்பியுள்ளனர்.

Advertisement

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில்,

அரசாங்கத்தின் கஸ்தூரிபா விடுதிப்பள்ளியில் சில இளைஞர்கள் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்ததைக் கண்ட சிறுமிகள் அந்த இளைஞர்களை அங்கிருந்து வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் வெளியேற மறுத்ததோடு சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்ளவும் தொடங்கினர்.

Advertisement

இதையடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து பள்ளிக்குள் நுழைந்த அந்த இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞர்களை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அந்த சுற்று வட்டார மக்கள் கூறுகையில், பள்ளியில் பாதுகாப்பு வசதி இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

Advertisement


 

Advertisement